11:44 AM

இர்பான் பதானை முத்தம் கொடுக்க முயன்ற பெண் - அழகான படக்காட்சி.

கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு விழாவில் சபீனா என்ற பெண் இர்பான் பதானை முத்தம் கொடுக்க முயல அந்த இடமே சிறிது நேரத்திற்கு பரப்பரபானது . பெங்காளி பெண்களுக்கு தைரியம் இருக்குனு தெரியும் ஆனா இந்த அளவுக்கு இருக்கும்னு தெரியாது.

5:36 PM

படக்காட்சி - சிறுவனை விழுங்கும் மிகப்பெரிய மலைப்பாம்பு .






1:49 AM

மோதி விளையாடு - திரையரங்க அனுபவம்


அந்த கொடுமைய எங்க போய் சொல்வென். அதான் இப்பதிவில் நான் படம் பார்க்கும்போது ஏற்பட்ட அனுபவத்தை கற்பனை கலந்து ஒரு வடிவேல் ஸ்டைலுல எழுதியருக்கிறேன்
ஸ்டார்ட் மியூசிக்.

நான் சிவனென்னு ரொட்ல போய்டிருந்தென், போற வழியில ஒரு சினிமா தியேட்டர், பார்த்தா சரண் இயக்கும் "மோதி விளையாடு" பெரிய டிஜிட்டல் பெனர் இருந்திச்சு. பேரே பயங்கரமா இருக்கு வேணாம்டா சாமி அப்புறம் பார்க்கலாம் முடிவு பண்ணி திரும்பினா அப்ப ஒரு குரல் ""சார் டிக்கெட் இருபது ரூபாய்தான், பார்த்துட்டு போங்க சார்" ஒருத்தன் சொனனான்.
"என்னப்பா சொல்ற இருபது ருபாயா ?" என்று கெட்டதுக்கு சொன்னான் பாருங்க ஒரு பதில் "அதுகெல்லாம் ஒரு மூஞ்சி வேனும் சார், உங்களுக்கு ஃபிரியாவே கொடுக்கலாம் ஆனா புதுப்படம் பாருங்க அதான் இருபது ருபாய்" . "டெய், நீ ஒவரா பேசர , முதல டிக்கெட்ட கொடு" வாங்கி மைல்டா ஒரு டவுட்டொட உளள போனா என்ன சேர்த்து மொத்தம் இருபது பேருதான்.

சரி புது படம்தானே மனச தெத்திகிட்டு பார்க்க ஆரம்பிச்சென். ஒப்பனிங்கலாம் நல்லாதான் இருந்திச்சு , அப்புறம் ஒருத்தன் பேச ஆரம்பிச்சான் பாருங்க, அவன் பேசரது தமிழா? டமிலா? முடியல....... பக்கத்துல இருக்கருவனுட்ட கேட்டென் "சார், இவர் எப்ப சார் பேச்ச நிறுத்துவாறு ". "யொவ், இவருதான் ஹீரோ , படம் ஃபுல்லா இவருதான் பேசுவாரு" அப்படினு சொன்னான் பாருங்க அப்படியே ஸாக்காயிட்டென்.

நேரகொடுமைடா சாமினு படத்த பார்க்க ஆரம்பிச்சா அப்பானு ஒருத்தன் படத்துல வந்தான் பேசரப்பெல்லாம் புல்ஷீட் புல்ஷீட் திட்டினான் அது என்னவோ என்ன திட்டர மாதிரியே இருந்திச்சு.

கொஞ்சநேரத்தில பக்கதிலுருந்து குறட்டை சத்தம் கேட்க ஆரம்பிக்க, படத்துல வர பாட்டும் அதுவும் ஒரே மாதிரி இருந்திச்சு. எனக்கும் லெசா கொட்டாவி வந்து, கண்ண சொக்கிடச்சு.
டக்னு லைட்ட பொட்டாங்க, இடைவேளைனு சொன்னாங்க. அடப்பாவிகளா நிம்மதியா தூங்ககூட விட மாட்டானுங்க போலருக்கு. சரினு வெளியே வந்தா எண்ணி பத்து பேரு. அப்ப மத்தவங்கெல்லாம் எஸ்கேப்பா.

சரி கழுதை வந்தது வந்தாச்சு கடைசி வரை பார்த்திட்டு பொவொம். மறுபடியும் உள்ளே பொனென்.

பாருங்க படத்துல ஒரு ட்விஸ்டு ஹீரோ அனாதையாம். அப்பாடானு நிமிர்ந்து வக்காந்தா, ட்விஸ்டு மேல ட்விஸ்டுனு போட்டு என்ன குமுற குமுற சாகடிச்சானுங்க. அப்படியே தியேட்டர் இருக்கரவன் ஒருத்தன் ஒருத்தனா கிளம்ப அரம்பிசானுங்க. ஆன நான் கடைசி வர பார்க்கனும் வைராக்கியமா இருந்தென்.

கிளைமாக்ஸ்க்கு முன்னாடி ஒரு பாட்டு வந்தது, சரி குத்தாட்டம்தான் ஆடபோறாங்கனு குஜாலா இருந்தா அங்க ஒரு ட்விஸ்டு , ஆடினது வெற யாரும் இல்லை படத்தோட மியுசிக் டைரக்டர்ஸ், அய்யோ கண்ண கட்டுதே.,,,,,,,,,,,,,,,,.அய்யனாரப்பா

கடைசில தியேட்டர்ல ஆறு பேரு. அதுல இரண்டு பேரு கிளைமாக்ஸ்ல ஹீரோ பெச ஆரம்பிக்க போது கிளம்ப ஆரம்பிச்சிடாங்க . ஆனா போகும்போது எங்களை பார்த்து ஒரு வார்த்தை சொன்னாங்க "எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாங்கடா ரொம்ப நல்லவங்கடா ..........." .

படம் முடிந்து வெளியே வரும்போது எனக்கு டிக்கெட் கொடுத்தவன தேடினேன் கிடைக்கல "நீ எந்த ஜில்லாவுக்கு போனாலும் உன் சாவு என் கைலதாண்டியொவ்" சொல்லிபுட்டு கிளம்பினேன்.

பின்குறிப்பு
நிச்சயமாக இயக்குனர் சரண் தமிழ் திரையுலகிற்கு பல வெற்றி படங்களை கொடுத்த நல்ல இயக்குனர். ஆனால் இந்த படத்தின் ஏமாற்றமே இந்த வெளிப்பாடு.

7:15 PM

விலங்குகளிடம் கில்மா பண்ணும் அபூர்வ மனிதர்.

வாங்க பழகலாம் பிடிச்சிருந்தா லவ்ரா இருக்கலாம் இல்ல பிரண்ட்சா இருக்கலாம்?.


இப்படி ஒரு சூப்பர் பிகர் கேட்டால் , என்ன சொல்வோம் " தாரளாமா, ஹீ ஹீ " என்று பல்லை இளீத்து கொண்டு பதில் சொல்வொம் அல்லது மைண்டல வச்சிருக்கென் “என்று வரட்டு பம்மாத்து (என்னை போல ) விடுவொம். ஆனால் ஒரு சிங்கமொ அல்லது புலியொ "வாங்க பழகலாம்" என்று கேட்டால் உங்கள் பதில் ?????????

ஆனால்o தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கெவின் ரிச்சர்சன் என்பவர் சிங்கம் , புலி மற்றும் கொடிய காட்டு விலங்குகளோடு பழகி அது கூடவெ வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.. ஆச்சிரியமாக இருக்குல ஆனால் உண்மை , அவரோட நெருங்கிய தோழர் யார் தெரியுமா? நம்ம சிங்கம்தான்.

இவர் ஜோகன்ஸ்பர்க் அருகே அமைந்திருக்கும் வனவிலங்கு காப்பகத்தில் பணி புரிகிறார்
இவர் விலங்குகளின் உள்ளுணர்வை தெரிந்து கொள்வதில் திறமையுள்ளவர். இதனால் இவர் எந்த கொடிய விலங்குகளிடம் கூட பழக முடியும். இதுவரை எந்த மிருகமும் கொபமாக முறைத்தது கூட இல்லை. இது ஒரு கடவுள் கொடுத்த வரம் என்று சொல்கிறார்
.


இங்கே இவர் சில விலங்குகளோடு கொஞ்சும் புகைப்படங்களை பாருங்கள்

நல்லாதான் சிங்கத்த முத்தம் கொடுக்கிறார், அது அவருக்கு . ஆனா நமக்கு கொத்தோட புடிங்கிடுமோ என்று பயமால இருக்கு.

“நமக்கும் பார்க்க ஆசையா தான் இருக்கு , ஸோ ஸ்வீட்!...



" நல்லா தான் போஸ் கொடுக்கிறார், என்னமொ நமீதாகிட்ட ெராமான்ஸ் பண்ற மாதிரி”



“ இதுவல்லவொ போஸ் “ .


இவருக்கு என்னதான் மிருகத்தொட உள்ளுணர்வு தெரிந்து பழகினாலும் , நம்ம ஊர் பெண்களோட மனசல என்ன இருக்குனு கண்டுபிடிக்கவே முடியாது.

மீண்டும் சந்திப்போம்.











3:33 PM

மாப்பு வச்சிடாடா ஆப்பூ?

நட்ட நடு இராத்திரியில் மகேஷ் தூங்காமல் எதெயோ வெறித்து கொண்டு பார்த்துகொண்டிருந்தான். " நீ இன்னும் தூங்கலையா நானும் உன்ன ரெண்டு நாளபார்க்கிறேன் சரியா சாப்பிட மாட்ற பேச மாட்ற தூங்க மாட்ற என்னாச்சு உனக்கு " என்று ரகு கேட்டான். ரகுவும் மகேஷும் நெருங்கிய நண்பர்கள் இருவரும் ஒன்றாக வேலைசெய்கிறார்கள்.

"என்னடா தெரியாத மாதிரி கேட்கிற உனக்கே தெரியும் கீதா என்னை லவ் பண்ணமுடியாதனு சொல்லிட்டா , அவதான வாழ்க்கைனு நினைச்சிடிருந்தேன் " என்று மகேஷ் கரகரத்த குரலில் சொன்னான்.

" சரி விடு இப்ப என்ன ஆயிபோச்சி, கீதா இல்லாட்டி வேற பொண்ணு , மச்சான் உன்ன மாதிரி ஆளுங்கதான் பொண்ணுங்களுக்கு வெய்ட்டு ஏத்தி விற்றவேண்டியது அப்புறம் அவளுங்க ரவுச தாங்கமுடியாதுடா சாமி " ரகு நக்கலாக சொன்னான்.

" நானே கடுப்புள்ள இருக்கேன் இதுல நீ வேற " என்று கோபமாக சொனனான் மகேஷ் " மச்சான் உனக்கு ஒரு கஷ்டம்னா அது எனக்கும்தாண்டா , நீ கவலைப்படாத நான் இருக்கேன்டா! அந்த பொண்ணுகிட்ட நான் பேசறேன் " என்று ரகு ஆறுதல் சொன்னான்.

அதற்கு மகேஷ் " எப்படி மச்சான் ஆனா சொதப்பக்குடாது மச்சான், எனக்கு என்னமோ இது சரிப்பட்டு வராதுன்னு நினைக்கிறன் " .

" அட போடா நம்பிக்கைதான் வாழ்க்கை நாளைக்கு என்ன நடக்குதுன்னு பார்க்கதானபோற. அப்புறம் நான் கேட்காமலேயே நீ "புல்" வாங்கி தருவ பாரேன் , சரி இப்ப போய் தூங்கு " என்று நம்பிக்கையோடு சொன்னான் ரகு.

பிறகு இருவரும் உறங்க சென்றார்கள். மறுநாள் இருவரும் கீதாவின் வருகைக்காக காத்திருந்தனர்.

மகேஷ் மிகவும்பதட்டமாக இருந்தான். "நான் லவ்வ சொன்னப்ப கூட இப்படி பயப்படல இப்ப ஏன் இப்படி மனசு படபடக்குது " என்று தானாக பேசிக்கொண்டான் மகேஷ். ரகுவை நோட்டமிட்டான் அவன் இதெல்லாம் எனக்கு சர்வ சாதாரணம்டா என்பதை போலஅலட்சியமாக பார்த்தான்.

கீதா வந்துகொண்டிருப்பதை பார்த்தவுடன் மகேஷ் ரொம்பவே பதட்டமானான் . " மச்சான் அவ வரா நான் இங்க கடை குள்ள இருக்கான் நீ போய் பேசு" என்று மகேஷ் சொன்னான். ரகுவும் தலையாட்டிவிட்டு கீதாவை நெருங்கினான்.

அவள் பார்த்தவுடன் சிரித்துவிட்டு " நல்லா இருக்கீங்களா , உங்களபார்க்கணும்னு நினைச்சேன் ஆனா நீங்களே நேரா வந்திடீங்க " என்று ரகு அசடுகலந்த சிரிப்புடன் சொன்னான். " அப்படியா என்ன விஷயம் சொல்லுங்க" அவன்என்ன சொல்ல போறான் என்று தெரிந்து கொண்டே தெரியாத மாதிரி பதில்சொன்னாள். இவர்கள் இருவரும் பேசிகொல்வதை தூரத்திலிருந்து பார்த்துகொண்டிருந்தான் மகேஷ்.

"நேரா விஷயத்திற்கு வந்திடேறேன் , உன் மேல மகேஷ் உயிரே வச்சிருக்கான், ஆனா நீ அவன காதிலிக்க முடியாதன்னு சொல்லிட்ட" என்று ரகுசொல்லிமுடிப்பதுகுள் " ஆம்மா இப்ப அதுக்கு என்ன ?.. இப்ப நீங்க என்ன சொல்ல வறிங்க" என்று கீதா கோபமாக சொன்னாள். ரகு சிறிது நேரம் யோசித்தான் . பிறகு "சரி உனக்கு அண்ணன் இருக்கானா ?" என்று கேட்டான் அதற்கு கீதாவிடம் இல்லை என்று சட்டென்று ஒரு பதில். " இந்தபாரு இனிமே உனக்கு அண்ணன் நான்தான் , எந்த அண்ணனும் தன்னோட தங்கச்சிக்கு நல்ல வாழ்க்கைதான் அமைச்சி கொடுப்பான் , அதனால" என்றுமறுபடியும் சொல்லிமுடிப்பதுகுள் கீதா சுற்றிமுற்றி பார்த்துவிட்டு "மகேஷ் இங்கதான் இருக்கானு நினைக்கிறன் அவன கொஞ்சம் வரசொல்லுரிங்களாஅவன்ட கொஞ்சம் பேசணும் " என்று நிதானமாக சொன்னாள். ரகு முகத்தில் நூறுவாட்ஸ் பிரகாசம் வந்தது. சிறிது தூரத்தில் உள்ள கடைக்குள் இருக்கும் மகேஷை செல்பேசி முலம் " மச்சான் சீக்கரம் வாடா , உன்ன அவ வரசொல்ரா " என்றுசொன்னான். மகேஷும் அவர்களை பார்க்க சந்தோசமாக வந்தான்.

நெருங்கியவுடன் கீதாவை பார்த்தான் அவளும் சிரித்தாள். " ஹாய், சொல்லு கீதா என்ட பேசனும்னு சொன்னியா " என்று ஆவலாக கேட்டான். ரகுவும் விலக ஆரம்பித்தான் . " ரகு நீங்களும் இருங்க. சும்மா சொல்லக்கூடாதுரகு நல்லாவே என்னோட புத்தில உரைக்கிற மாதிரி பேசினாரு மகேஷ் " என்றுகீதா நக்கலாக சொன்னாள். மகேஷ் பதட்டம் கலந்த ஆர்வத்துடன் என்ன சொல்லபோகிறாள் என்று கேட்க ஆரம்பித்தான்.

" எனக்கு இனிமே ரகுதான் அண்ணன்னு அவரே சொன்னாரு ,கேட்கவே ரொம்பசந்தோசமா இருக்கு. எனக்கு ஒன்னுனா அவரு இனிமே பார்த்துபார்னு நம்பிக்கைஇருக்கு. ஆனா" என்று கீதா இழுக்க ஆரம்பித்தாள். ரகுவும் மகேஷும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர். கீதா மகேஷை பார்த்து " நான் என்ன சொல்லவறேனா எனக்கு இனிமே ஒருஅண்ணன் இல்ல இரண்டு அண்ணன் உன்னையும் சேர்த்து , நான் வரேன் " என்று முடித்துக்கொண்டு அவிடத்தை விட்டு நகர்ந்தாள் கீதா. மகேஷின் முகத்தில் சலனம் இல்லை. அடப்பாவி நான்தான் வேண்டான்னு சொன்னேனே பேசறன்னு சொல்லி என்ன அண்ணன் ஆக்கிட்டியே என்று ரகுவை திரும்பி பார்த்தபொழுது ரகு 100 மைல் வேகத்தில் தூரத்தில் ஓடிகொண்டிருந்தான்.

நண்பர்களே உங்களுக்கு இந்த கதை பற்றி தங்களின் கருத்தை பின்னோடோம் செய்வீர்கள் என்று நம்புகிறேன். மறக்காம வோட்டையும் குத்துங்க எஜமான் குத்துங்க இந்த பொண்ணுங்களே இப்படிதான்.

9:36 PM

கண்களை பாதுகாக்க ஒரு சிறந்த பயிற்சி.






இன்றைய காலக்கட்டத்தில் கணினியின் அவசியம் மிகவும் இன்றியமையாதது. இன்று எல்லா துறைகளிலும் கணினி புகுந்து விட்டது. அதனால் இன்று வேலை செய்பவர்கள் காலையில் முதல் மாலை வரை கணினி முன் உட்கார்வது தவிர்க்க முடியாதது. அதனால் உடம்பில் மற்ற உறுப்புகளை விட நமது கண்கள் தான் அதிகமாக வேலை செய்கிறது. ஆனால் நாம் நமது கண்களை பாதுகாக்க முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால் நாம் தெரிந்தே கண்களை கெடுத்து கொள்கிறோம்.

ஆனால் நமது வேலை செய்யும் நேரத்தில் சிறிது நேரத்தை பயன்படுத்தி சின்ன சின்ன கண்பயிர்ச்சிகள் செய்வதன் மூலம் நாம் கண்களை நன்றாக பாதுகாக்க முடியும். இந்தபயிர்சிக்கு பெயர் "20 - 20 - 20".

1. முதலில் 20 நிமிடத்திற்கு ஒருமுறை உங்கள் கவனத்தை கணினியிலேருந்து திசை திருப்பி 20 அடி தொலைவிலுள்ள பொருளை உற்று பார்கவேண்டும். இதனால் அசதியான உங்கள் கண்கள் புத்துணர்ச்சி பெரும்.

2. அதேபோல் 20 முறை கண்களை தொடர்ச்சியாக சிமிட்டவேண்டும். இதனால் உங்கள் கண்களின் ஈரபசப்பு தன்மை குறையாமல் இருக்கும். மேலும் கணினியால் ஏற்படும் கண்ணெரிச்சல் குறையும்.

3. அதெபோல் 20 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரே இடத்தில் உட்காராமல் எழுந்து சிறிது தூரம் நடக்கவேண்டும். இதனால் உங்கள் உடம்பிற்கு சீரான இரத்த ஓட்டம் ஏற்படும்.


இவ்வாறு நீங்கள் "20 - 20 - 20" பயிற்சியை நடைமுறை படுத்தினால் நிச்சயமாக் கண்களை பாதுகாத்து கொள்ள முடியும்.
இவ்வகை பயிற்சி எளிதாக இருந்தாலும் பழகத்திற்கு கொண்டு வருவது சிரமம்தான் ஆனால் முயற்சி செய்தால் நன்மை நமக்குதான்.

பின்குறிப்பு:
இந்த பதிவிற்கும் மேலே உள்ள படத்திற்கும் என்ன சம்மந்தம் என்று நீங்கள் நினைக்கலாம் . ஆனால் சம்பந்தம் இருக்கு , இந்தப்படம் உங்கள் கண்களுக்கு இரண்டு இரண்டாக தெரிந்தால் உங்க கண்ணு நல்ல கண்ணு. ஆனால் ஒழுங்காக தெரிந்தால் நல்ல கண்மருத்துவரை பாருங்கள்.


10:08 PM

இணையத்தளம் மூலம் பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த வழி

இணையத்தளம் மூலம் பணம் சம்பாதிக்க பல வழிகள் இருக்கின்றன. வலைப்பதிவு எழுதுவது(BLOG), கருத்தாய்வு செய்வது (survey), ஆன்லைன் வர்த்தகம் என்று பல வழிகள் இருக்கிறது . அதில் கருத்தாய்வு(survey) மூலம் பணம் சம்பாதிப்பது ஒரு எளிதான முயற்சி . பல நல்ல கருத்தாய்வு வலைதளங்கள்(survey website) உள்ளன.


அதில் A.W.SURVEYS என்ற வலைத்தளம் மிகவும் பிரபலமானது மேலும் நம்பகதனமானது. இதில் உறுப்பினராக இருக்க பணம் கட்டம் தேவையில்லை (பல கருத்தாய்வு வலைத்தளங்களில் செருவதிற்கு பணம் கட்டுவது அவசியம்). மாறாக நீங்கள் சேர்ந்தால் 6$ உங்களுக்கு கிடைக்கும். மேலும் நீங்கள் ஒரு survey செய்தால் 2$ முதல் 8$ வரை சம்பாதிக்கலாம்.




survey செய்வது மிகவும் எளிதானது . ஒரு நிறுவனத்தை பற்றியோ அல்லது ஒரு வலைத்தளத்தை பற்றியோநீங்கள் மூன்று வரிகளில் உங்கள் கருத்தை எழுத (ஆங்கிலத்தில் ) வேண்டும். மேலும் Referal scheme மூலம் ஒரு நபர்(உங்கள் மூலம் சேரும் நபர்) விதம் 1.25$ சம்பாதிக்கலாம் .

உங்களுக்கு இந்த A.W.SUREYS வலைத்தளத்தில் சேர ஆர்வம் இருந்தால் கீழே உள்ள சுட்டியை சொடுகவும்

$6.00 Welcome Survey After Free Registration!




உங்கள் கணக்கில் 75$ சேர்ந்தவுடன் நீங்கள் அதை paypal மூலம் எடுத்து கொள்ளலாம்.

நன்றி வாழ்த்துக்கள்







4:42 PM

நமீதாவும் இரண்டு முனிவர்களும்






இரண்டு முனிவர்கள் ஒரு காட்டு பகுதியில் சென்று கொண்டுயிருந்தனர். அப்பொழுது மழை கொட்ட ஆரம்பித்தது . அதை பொருட்படுத்தாமல் நடக்க தொடங்கினர் . பாருங்கள்!!!! அவர்கள் முன்பாக கடவுள் தொன்றுவாரோ இல்லையோ கவர்ச்சி பீரங்கி நமீதா அவர்கள் முன் தென்பட்டார். ஆனால் மழை வெள்ளத்தினால் நமீதா சிக்கி கொண்டு போராடிகொண்டிருந்தார். அப்பொழுது இருவரில் ஒரு முனிவர் மழையில் நனைந்த நமிதாவை லாவகமாக தூக்கினார் . இதை பார்த்த இன்னொரு முனிவர் இது என்ன கொடுமை என்று தலையில் அடித்து கொண்டார். மேலும் மேடான பகுதி வந்தவுடன் நமீதாவை இறக்கி விட்டார் முனிவர்.

பிறகு இரண்டு முனிவர்களும் அவர்களின் இருப்பிடம் நடக்க ஆரம்பித்தனர். இருப்பிடம் வந்தவுடன் இன்னொரு முனிவர் நமீதாவை தூக்கிய முனிவரிடம் "நாம் முனிவர்கள், முற்றும் துறந்தவர்கள், நீ செய்த காரியம் ஒரு முனிவர் செய்யகூடாதது அதுவும் நமீதாவை தூக்கியது மிக பெரிய குற்றம் " என்று கோபமாக சொன்னார். அதற்கு அந்த முனிவர் "நான் நமீதாவை அப்பொழுதே இறக்கி விட்டுவிட்டேன்!. நீங்கள்தான் இன்னும் அப்பெண்ணை மறக்காமல் மனதிலே வைத்துக்கொண்டு இருக்கிறிர்கள்."என்று சாந்தமாக சொன்னார்.